Saturday, March 27, 2010

படித்ததில் பிடித்தது

பெயர் தெரியாத
பெண் குழந்தைகளையெல்லாம்
நான்
உன் பெயர் சொல்லி
அழைத்த போது
தொடங்கியிருக்க வேண்டும்...

அல்லது...

என் பெயர் சூட்டப் பட்ட
ஆண் குழந்தையை
பெயர் சொல்லியழைக்க
நீ
தயங்கி நின்ற போதேனும்
ஆரம்பித்திருக்கக் கூடும்...

இல்லையெனில்...

எப்போதும்
என் கண்ணைப் பார்த்து
பேசும் நீ
முதன் முதலாய்
மண்ணைப் பார்த்துப்
பேசும் போதாவது
தோன்றியிருக்கலாம்...

அதுவும் இல்லையெனில்...

கொஞ்சம் கொஞ்சமாய்
பேச ஆரம்பித்த
நீ
கொஞ்சிக் கொஞ்சி
பேச ஆரம்பித்த போது கூட
நிகழ்ந்திருக்கலாம்
அந்த மாற்றம்...

இவையெதுவும் இல்லையெனில்...

நம் விழிகளின்
விலகாத பார்வை
சற்றே விலகி
உன் வெட்கத்தில் விழுந்து
முத்தத்தில் நனைந்த வேளையில்
தானும் சேர்ந்தே
நனைந்திருக்கலாம்
நம்முடனான காதல்.....

எத்தனையோ பெண்கள்
இருக்கையில்
என்னை மட்டும்
உனக்குப் பிடித்துப் போனதெப்படி...?
இது
ஆயிரம் முறை நீ
என்னிடம்
கேட்ட கேள்வி...

ஒரு முறையேனும்
உனக்கு சொல்ல நினைத்து
சொல்லாத பதில்...

வேறு யாரைப் பார்க்கும் போதும்
உயிர்க் காற்று
என் உள்சுவாசம் மறுத்ததாய்
இதுவரை
என்
நினைவில் இல்லையடி..................



Thursday, March 25, 2010

ஒரு தலைகாதலின் வேதனை

உன் அன்புக்காகவும் காதலுக்காகவும் எங்கும் ஒரு ஜீவன் நான். உன் கண்ணில் படுவதற்காக நான் அதிக முயற்சி எடுக்கிறேன். உன் கவனத்தை என்பால் ஈர்ப்பதற்காக நான் அதிக சிரம படுகிறேன். உன் பார்வை என் மீது படுவதற்காக நான் தவம் இருக்கிறேன். என் உணர்வுகளையும் காதல் வலியினையும் உன் மேல் நான் கொண்ட அன்பையும் உன்னிடம் சொல்வதற்கு துடிக்கிறேன்.


ஆனால் நீயோ என்னை பார்ப்பதையே தவிர்க்கிறாய். என்னை கண்டதும் உன் முகத்தை திருப்பி கொள்கிறாய். என் பார்வை உன் மீது படும் போது புழுவை போல துடிக்கிறாய்.








என் பார்வை உன் மீது பல முறை விழுந்திருக்கிறது. ஆனால் உன் கண்கள் ஒரு முறை கூட என்னை காண மறுக்கிறது. காரணம் என்ன கண்ணே. என்னை காண மனம் இல்லையா. இல்லை உனக்கு மனமே இல்லையா?



விடிகிற பொழுது ஒவ்வொன்றும் உன்னை காணத்தான் என்று நான் நினைக்கின்றேன்.
ஆனால் நீ என்னை பார்க்க மறுப்பதால் அடுத்த விடியல் வேண்டாம் என்று நினைக்கிறேன். காதல் எல்லோரையும் கவிஞனாக்கும். ஆனால் உன் மீது நான் கொண்ட காதல் என்னை பித்தனாக்கியது. தினமும் ஒரு முறையாவது உன்னை காணவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். ஆனால் வாழ்நாளில் ஒரு முறைகூட என்னை காணவேண்டாம் என்பதுதான் உன் எண்ணமா ?



காதல் வேண்டாம் என்று நீ நினைக்கலாம். ஆனால் உன்னை காண்பது ஒன்றே போதும் என்று நான் நினைக்கின்றேன். நான் உன் எதிரில் வருவதை நீ விரும்பாமல் இருக்கலாம்







ஆனால் நீ என் கனவில் வரமாட்டாயா என்று நான் ஏங்குகிறேன். என் நிஜத்தை நீ தவிர்க்க
நினைக்கலாம். ஆனால் உன் நிழலையாவது காண முடியுமா என்று தவிக்கிறேன்.


உன்னால் பசி மறந்தேன் உறக்கம் மறந்தேன் உன்னை தவிர எல்லாம் மறந்தேன். ஆனால் நீ என்னை மறந்து விட்டாய். தவறாக கூறி விட்டேன். நீ என்னை மறக்கவில்லை.
நினைத்தால் தானே மறக்க முடியும். நீ என்னை நினைக்கவே இல்லை. பிறகு எப்படி மறக்க முடியும்



நினைக்க மனமில்லாத உனக்கு உன்னை மறக்க முடியாத என் இதயத்தின் வலி எப்படி தெரியும்.


உன்னை ஏன் நான் நினைக்க வேண்டும். உன்னை நினைத்து நான் ஏன் உருக வேண்டும்
என்று என் மனம் கேட்கிறது. ஆனால் என் மனம் என்னிடம் இல்லை அது உன்னிடம் தன் இருக்கிறது என்று நான் உணரவில்லை. என்னிடம் இல்லாத என் மனதிடம் நான் கேள்வி கேட்டு என்ன பயன். மனமே நீதான் என்கிற பொழுது நான் என்ன கேள்வி கேட்பது உன்னிடம் ?


ஒரு பெண்ணுக்கு இருக்கின்ற அனைத்து குணங்களும் உன்னிடம் இருக்கிறது. ஆனால் காதல் மட்டும் இல்லாமல் போனது ஏன் ? காதல் பிடிக்கவில்லையா ? இல்லை என்னை பிடிக்கவில்லையா ? காதலிக்க மனம் இல்லையா ?அல்லது உன் மனதில் காதலே இல்லையா? இல்லை உன்னை காதலிக்கும் என் மனம் புரியவில்லையா ?


காதல் புரியாத உனக்கு உன்னை காதலிக்கும் என் மனதின் வேதனை எப்படி புரியும். நீ என்னையும் புரிந்து கொள்ள வேண்டாம் என் காதலின் வேதனையும் புரிந்து கொள்ள வேண்டாம். ஒன்றை மட்டும் புரிந்து கொண்டால் போதும். இந்த உலகில் எத்தனையோ பெண்கள் இருக்கலாம் .ஆனால் நீ மட்டும்தான் என்னுடைய உலகம்.


என் மனதில் உள்ளதை உன்னிடம் மறைக்காமல் சொல்லி விட்டேன். ஆனால் உன் மனதை மட்டும் நீ மறைத்து விடுகிறாய். எத்தனை காலம்தான் நீ மறைப்பாய். நீ எத்தனை
காலங்கள் மறைத்தாலும் அதுவரை என் காதலும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். உன் மனம் திறக்கும்வரை என் உயிர் உன்னை நினைத்து கொண்டிருக்கும். உன் காதல் கிடைக்கும் வரை என் நிழல் உன்னை தொடர்ந்து கொண்டிருக்கும்.



இப்படிக்கு
உணமையான காதலன்

Monday, March 1, 2010

காதல் திருமணத்திற்கு முன் ......,, திருமணத்தின் பின் ......


திருமணத்திற்கு முன்

அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது?

அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..

அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..

அவள் : என்னை காதலிக்கிறீர்களா…?

அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்…

அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…?

அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற….

அவள் : என்னை முத்தமிடுவீர்களா…?

அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…

அவள் : என்னை அடிப்பீர்களா?

அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….!

அவள் : நான் உங்களை நம்பலாமா?

அவன் : ம்ம்ம்.

அவள் : அன்பே…!
திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும்

Friday, February 26, 2010

காதல் தேர்வு -- Love Test

நீங்க லவ் பண்றீங்களா??


நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 signs ...

12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம் தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.

11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க.

10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க.

9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.

8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க

6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க.

5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க.

4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க

3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருந்துட்டேயிருந்துருப்பாங்க

2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.

1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க

Monday, January 25, 2010

காதலிப்பது எப்படி?




1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து
விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால்
அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..



2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை
வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்).
முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால்
நல்லது.



3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம்.
தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.



4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட
வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது.
முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது
அவசியம்.



5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.



6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக
சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும்
திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.



7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட்
ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை
அழிக்கணும் இல்லை.



8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு
கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு
வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.



9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம்.
பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that,
Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு
இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.



10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது
வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே
வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான்
தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட்
கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க
இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும்
மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க
ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே
வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும்,
அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட
உதவும்.



11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை
மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு
சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி
போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல
கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)



12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு
விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ
தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி
வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால்
கொடுக்க கூடாது.



இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு
காதல் மன்னன்தான்...


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டுமே...

Friday, January 22, 2010















♥♥வலைதள காதல்♥♥


வலைத்தளத்தில் வலை பின்னும் -சிலந்திகளே .....
காதல் கூடு
கட்டும் பறவைகளே ......


உம் -ஜோடி சரி என்று உணர்கிரீரோ .....
அதன்
-உண்மை நிலை அறிகிரீரோ ......


பலரும் இங்கு காதல் என்ற மாயையில் -சிக்கி
...

அதன் வேகத்தில் சந்தோசித்து .....
சிலநாளில் முறிவடைந்து சோகத்தில்
மூழ்கி ....

வாழ்கையே முடிந்தது என்று .....
இங்கிருந்து காணாமல் போவதேனோ
....


சில காதல் திருமணத்தில் முடிவதும் .....
சந்தோசம் என்றாலும்
நடக்கும்வரை ....

.சந்தேகமே சந்தேகமே....

திருமணத்தில் சந்திக்கும் போது
...

நிறை குறைகள் தெரிவுதில்லையோ .....

ஐயோ -காண்பவர்கள் சிரிக்கிறார்களே
.../....

பெண்ணோ ஒட்டகம் .....
மாபிளையோ எருமைபோல் ....
என்ன இது
பார்க்காத வலைதள காதலோ ....
<